திங்கள், 6 மே, 2019

சைக்கோ


சைக்கோ
========================================செந்நிலா

முதல் இரவில்
செம்பஞ்சுக் குழம்பில்
பூசிய  சித்திரங்களின்  என்
பாதங்களை வருடியவர்....
பாதகராகி
தன் செருப்புப்பாதங்களால்
எட்டி உதைக்கும்
திருப்பங்களை என் கண்ணீரின்
ஏழு வர்ண கதிர்ப்புகளின்
கலைடோஸ்க்கோப்பில்
சுழற்றி சுழற்றிக்
கண்டு கொண்டிருக்கிறேன்.
அந்த இரவு தான்
என் எல்லா விடியல்களையும்
விழுங்கித்தீர்த்துவிட்ட
இரவு.

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக