சனி, 29 டிசம்பர், 2018

துடிப்போம்...

துடிப்போம்...
===========================================ருத்ரா


ஒரு பூவை நீட்டி
ப்ரோபோஸ் பண்ணினேன்.
நான் எதிர்பார்த்தது தான்.
மறுத்தாய் கடுமையான சொற்களில்.
நீ நினைத்தாய்
என்னை ஒரு ஊசியிலைக்காட்டுக்குள்
தள்ளினாய் என்று.
கூரிய முட்களில் நான்
ரத்தச்சேற்றில் கிடப்பேன் என்று.
சரி தான்.
இந்த புண்களின் காடு
என்னோடு போகட்டும்!
நீ
ஏன் இப்படி
தூக்கமில்லாமல் புழுவாய் துடிக்கிறாய்?
கோடி கோடி அனிச்ச மலர்களைக்கொண்டு
செய்தது அல்லவா உன் படுக்கை?
உன்னை நெருடுவது
நானே தான் என்று
உனக்கு
என்றைக்கு புரியும்?
புரியும் வரை
துடிப்போம் புழுக்களாய்
இந்த இதயச்சிமிழ்களில்!

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக