திங்கள், 3 டிசம்பர், 2018

கல்பெயர்த்து இழிதரும்

கல்பெயர்த்து இழிதரும்
=================================ருத்ரா இ பரமசிவன்.

கல் பெயர்த்து இழிதரும்
இமிழ் இசை அருவி
புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ
பச்சை படர்த்தி பகலவன் தீவிழி
அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை
நெடுநல் நாட!அஃது மன் அன்று
உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌
அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி.
நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும்
அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும்.
ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர்
பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும்.
மைபொதி வானும் புள்நிரல் பொலிவும்
இடி உமிழ்பு கண்டு நடுக்குறு செய்யும்.
துடி அன்ன அதிர்வில் புல்லிய தும்பி
வலைச்சிறைக் கண்ணும் அழியச்சிதையும்.
முற்றிய கழையைப் பற்றி நெரிக்கும்
தூம்பின் நீள்க் கை நெம்பு தரும் வேழம்.
யானும் முறிபடும் உயிர் நரல் கேட்டிலை.
நாஞ்சில் கவ்விய கொழுஞ்சினை கயல்படும்
துடிப்பும் அறியலை உயிர் நூல் கோத்து
உலுக்கிச் செகுக்கும் ஊசியோடு அழியும்
ஆவியும் கண்டிலை ஆர்கலி மாவொடு
தழுவினையாக ஆற்றொடு போகி
ஐந்தும் மறந்தனை எத்திணையாயினும்
அத்திணை ஈண்டு அருகுமின் விரைமின்
நெடுவேல் அன்ன மாவின் தளிராய்
அளியேன் மாதோ விதிர் விதிர்ப்புற்றே.

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக