சனி, 8 டிசம்பர், 2018

குகை.

குகை.
=========================================ருத்ரா

தியானம் செய்யுங்கள்.
உங்கள் உள்ளொளி பெருகும்
என்றார்கள்.
உங்கள் மனதைக்கொண்டே
உங்கள் மனதுக்குள்
சுரங்கம் வெட்டுங்கள்
என்றார்கள்.
சரி
என் மனதை உலைக்கூடத்தில்
காய்ச்சி வார்த்து
மண்வெட்டி செய்து விட்டேன்.
அதற்கு பிடி போட வேண்டுமே.
எதைக்கொண்டு போடுவது
என்று கேட்டேன்.
சரியாகக்கேட்டாய்.
அந்த இருட்டுச்சுரங்கத்தில்
கேள்வி எனும்
தீக்குச்சியை உரசு.
உனக்கு பிடி கிடைக்கும்.
பிடியை பிடித்துக்கொள் என்றார்.
அந்த குகைக்குள்
வீசப்பட்ட கேள்வி இது.
"ஏண்டா ..மீண்டும்
இந்த குகைக்குள் போய்
என்ன மிருகம் ஆகப்போகிறாய்?"

=============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக