சனி, 22 டிசம்பர், 2018

தூங்காமரத்தின் தூங்கிய பழம்போல்..


தூங்காமரத்தின் தூங்கிய பழம்போல்..
===========================================ருத்ரா இ பரமசிவன்.


பாசடை அடர்கரை கான்யாற்றுப்பிழியல்
நீர்படுத்தன்ன தொடி நெகிழ்ப்பாவை
எல்லுடன் மதியும் முல்லையும் மறந்து
பெரும்பேய் ஊழி ஊர்ந்தனள் மன்னே.
கூர்நடுங் கோல்போன்ம் கரியநெடுங்கங்குல்
துயில் மடிந்தன்ன இருள்சூர்க் கானம்
செலவு உய்த்தனன் என் கொல்?
நெடுமூச்சின் கண்ணி விடு மூச்சில்
இறந்தாள் பிறந்தாள் பிறந்திறந்திருந்தாள்
மண்ணும் வானும் மரனும் மரபும்
உண்ணல் உடுத்தல் ஆயகலையும் மறந்தாள்
தூங்கா மரத்தின் தூங்கிய பழம்போல்
கனவின் கொடுஞ்சிறைப்பட்டனள் போலும்
தண்ணிய படப்பை அவன் ஆர் எழில் அகலம்
தோயக்கிடந்து நெஞ்சில் அழிந்தாள்
அளியவள் ஆங்கே அழல்வாய்ப்பட்டே.

============================================
(மீள் பதிவு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக