செவ்வாய், 18 டிசம்பர், 2018

மௌனம்

மௌனம்
============================================ருத்ரா

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாது.
காதல் தாக்கிய புலி
புல்லைக்கூட
தின்றுகொண்டே இருக்கும்.
இந்த பூங்காவில்
அவள் இங்கு
முகம் திருப்பினால் தானே
ஏதாவது சொற்களை
தின்று மென்று விழுங்கி
கொட்டிக்காட்டலாம்.
அவள் மௌனம்
அந்த காக்கா முள்ளைவிட‌
கடுப்பானது கூர்மையானது.
வரச்சொல்லி உட்காரவைத்து
இப்படி
தட்டாம்பூச்சி இறகுகள் எனும்
அந்த நுணுக்கமான
"நேனோ" வினாடிகளைக்கூட
நகம் கடிப்பது போல்
கடித்து கடித்து துப்புகிறாளே !
இதிலும் ஒரு சுகமா?
அது அவளுக்கா? எனக்கா?
காதல் எனும் தொல் (லை )காப்பியத்தில்
நெடில் குறில் காலங்களுக்கு
எத்தனை
"மாத்திரை" போட்டுக்கொண்டு
தண்ணீர் குடிக்கவேண்டும்?


=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக