வியாழன், 20 டிசம்பர், 2018

நம்ம "மூணு குலசாமிகள்."




நம்ம "மூணு குலசாமிகள்."
==================================================ருத்ரா



கமல்


இன்னும் தராசு தூக்கிக்கொண்டு
பழையபேப்பர்
வியாபாரத்தை விட்டு
வரவே இல்லை.
துவக்கத்தில் தூக்கிவந்த‌
திராவிடன் தமிழன் முகமூடிகள்
இப்போது பரணில்.
சினிமாவின் கல்லாப்பெட்டிக்குள்
கூட்டணிக்கணக்கும் உண்டு.
ஊசிவெடிகளை
வசனமாக கொளுத்திப்போட்டுவிட்டு
கூட வந்தவர்களை வைத்து 
ஆனை வெடி ஓசையை
கிளப்பிக்கொண்டிருக்கும்
இவர் என்ன செய்யப்போகிறார்?


ரஜினி


குதிரைவாயின் முன்
காரட்கிழங்கு கட்டிய குச்சியை
நீட்டிக்கொண்டே
சவாரி செய்கிறார்.
ரசிகர்கள் நுரைதள்ளி நுரைதள்ளி
மேரீனா அலைகளை
கானல் நீர் திரையில்
காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆத்மீகத்தின்
முதலை வாய்க்குள் இருந்து கொண்டு
முயல்களை ரட்சிக்கவந்த பாபா!
ஓட்டுக்களைக்குவிக்கும்
கணினி "எந்திரனாக"
அடுத்த 3.0 ல் எகிறிவரும்
இந்த ஜிகினா விடியல்
காவி மேகங்களை மீறி
உண்மை விடிவானத்தின்
சித்திரம் காட்டுமா?



விஜய்


ஒரு விரல் புரட்சியின்
தன் குத்தாட்ட
அரசியல் இயக்கப்பாட்டின்
இதயம்
அராஜகவாதிகளால்
குத்திக்கிழிக்கப்படும்போது
கம்முனு இருந்து
ஜம்முனு இருந்தாரே
இது தான் அவர் உள்ளடக்கமா?
ரசிகர்களே!
தமிழின் ரசிகர்கள் எனும்
ஊழிப்பேரலைகளாக
என்றைக்கு உருவாகப்போகிறீர்கள்?
அது வரைக்கும்
இந்த சோளக்காட்டுப்பொம்மைகள் தான்
உங்கள் குலதெய்வங்களா?










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக