வியாழன், 6 டிசம்பர், 2018

அண்ணே ..அண்ணே

அண்ணே ..அண்ணே
==============================================ருத்ரா

அண்ணேங் !..அண்ணேங் !
(விக்கி விக்கி அழுகிறார்)

ஏண்டா அழறே...அம்மாவுக்கு இரங்கலா?
ஆமாண்டா ..ரொம்ப சோகமாத்தாண்டா இருக்கு.
ரெண்டு வருடம் ஆயிப்போச்சு..

அத விடுங்கண்ணா ...ரெண்டு வருஷம் ஆயிப்போச்சு தான்.

வேற என்னடா?

அண்ணே ..சில மாதங்களுக்கு முன்னால தான்
அவங்க மறுபடியும் செத்துட்டாங்கண்ணே ..

என்னடா..என்னென்னமோ சொல்றே..

ஆமாண்ணே ...அவங்களுக்கு சிலை செஞ்சதா   சொல்லி
வேற யாரோட சிலையைக்கொண்டு வச்சாங்கல்லாண்ணே ...

அப்படி இல்லடா ...சிலை சரியா வரல்லேன்னாங்கடா ..

ஆமாண்ணே ..அம்மா அது வரைக்கும் அவங்க
ஆன்மாவோட வாழ்ந்துகிட்டு இருந்தாங்கண்ணே ..
அவங்க இறந்ததே
அந்த சிலையைப்பார்த்தப்புறந்தாண்ணே...

என்னது?

ஆமாண்ணேங்க்க் ...(விக்கி விக்கி அழுகிறார்)

ஐயோ சாமீடா .... நான் போறேண்டா...

(இவர் ஓடுகிறார்.அவர் அழுதுகொண்டிருக்கிறார்.)

===========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக