திங்கள், 23 செப்டம்பர், 2024

தமிழ் வெல்லட்டும்.



தமிழ் வெல்லட்டும்.

___________________________________________________




கடவுள் இல்லை என்றால்

நாம் இல்லை

என்று ஆயிரம் ஆண்டுகளாக‌

நம் மூளையை வழித்து விட்டவர்கள்

கடவுள் அருகே நீ இருக்க‌

சமஸ்கிருத மந்திரங்கள் தான் துணை

என்று

நம் மூளைக்கபாலத்தை முழுவதும்

சுரண்டி

அந்த சமஸ்கிருதக்கூளத்தை

அடைத்து விட்டார்கள்.

வெள்ளைக்காரன் வந்து

அவனுக்காகவும் நமக்காகவும் 

அறிவுச்சன்னலை திறந்து விட்டான்.

அந்த மதவாத தந்திர நரிகள்

அந்த சன்னலையும் அவர்களே

குத்தகைக்கு எடுத்துக்கொண்ட பின்

நம்மிடமே

ஆங்கிலம் மிலேச்சம் 

தமிழ் அதைவிட மோசமான மிலேச்சம்

என்று 

மீண்டும் மீண்டும்

நமக்கு மூளைச்சலவை செய்தார்கள்.

அதற்கு பக்க பலமாக 

இருந்தவர்களே

இருப்பவர்களே

நம் மன்னாதி மன்னர்கள்.

இந்த அடிமைத்தோலை

எப்படி நம்மிடமிருந்து

உரித்துக்கொள்ளப்போகிறீர்கள்.

கடவுள் பக்தி எனும்

நாசகார கவசம் நம்மை விட்டு

தகர்த்தெறியப்பட வேண்டும்.

அப்போது தான் நச்சுத்தனமான‌

சாதி வெறியின்

நான்கு வர்ண முலாம் பூச்சை

துடைத்து எறிய முடியும்.

இதற்கு

உங்கள் அறிவுக்கண்கள் 

திறந்தே ஆகவேண்டும்.

அதெல்லாம் முடியாது.

கும்பாபிஷேகம் போவேன்

அர்ச்சனைத்தட்டுகள் ஏந்துவேன்

என்றால்

உங்கள் கல்லறைளை

உங்கள் முதுகில் வைத்துத்

நீங்களே தைத்து வைத்துக்கொண்டு

திரிகிறீர்கள் என்று பொருள்.

தமிழ் வெல்லட்டும்.

தமிழன் விழிக்கட்டும்.


______________________________________________

சொற்கீரன்

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக