சனி, 21 செப்டம்பர், 2024

"காணி நிலம் வேண்டும்!"

 

"காணி நிலம் வேண்டும்!"
____________________________________
பாரதி
அது கேட்டான் இது கேட்டான் என்று
நானும் தான் கேட்டேன்
ஒரு கவிதை எழுதவேண்டும்
என்று.
போதும் போதும்
என்று
அதுவும் என்னிடம் கேட்டது
ஒரு காகிதமும் பேனாவும்
கவிதை எழுத வேண்டும் என்று.
என்ன உனக்கா வேண்டும்.
கவிதையே கவிதை எழுதுமா?
அது கவிதை எழுதி
சரக்கென்று நீட்டியது.
உலகத்திலேயே மதிப்பு வாய்ந்தது
பேனாவும் காகிதமும்
நீ கவிதை எழுதி
அதை சவம் ஆக்கிவிடாதே.
________________________________________________
பூச்சிக்கவிஞன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக