செவ்வாய், 17 செப்டம்பர், 2024

பெரியாரியம் வெல்க!

 


பெரியாரியம் வெல்க!

_______________________________________



பெரியார் வரலாறு என்று

தனியாய் இங்கு

எழுத்துக்கள் கொண்டு 

காகிதங்கள்

மேய்ந்ததில்லை.

மனித நீதியின் 

தீக்கொழுந்துகள்

சுடும் ம்னச்சன்றுகளே

பெரியார் ஏறிய மாணிக்கப்படிகள்.

மதம் 

ஒரு மனிதனை காலில் போட்டு

மிதிக்க இன்னொரு மனிதனுக்கு

அவன் பிறப்பின் வழியாய்

ஒரு மகுடத்தைச்சூட்டுமானால்

அந்த மகுடமும் கடவுள் 

அவனுக்கு மட்டுமே தந்தது என்று

ஸ்லோகங்கள் சொல்லுமானால்

மனிதனுக்கு 

இந்த மதம் தேவையில்லை.

இந்த கடவுள் தேவையில்லை

இந்த ஸ்லோகங்களும் தேவையில்லை.

இது தேவை 

என்று சொல்பவனே

அயோக்கியன்

காட்டுமிராண்டி

மனிதனாக‌

பார்க்கப்படத்தகுதியற்றவன்.

அதை 

வர்ணங்களாய்

சாதிகள் ஆயிரமாய்

சாத்திரம் செய்பவர்கள்

மனித 

வரலாற்றுப்பக்கங்களிலிருந்து

கிழித்தெறியப்பட வேண்டியவர்கள்.

பெரியார் என்றால் என்ன?

இது தாண்டா பெரியார்!

மானுட அநீதி கண்டு

சீற்றம் கொள்ளும்

எரிமலைக்கு பன்னீர் தெளிக்கும்

மடமைகளை 

தகர்ப்பவனே தமிழன்.

பெரியார் எனும் இந்த பெரியாறு

அரசியல் தந்திரம் கொண்டு

கட்டப்படும் எல்லா அணைகளையும்

உடைத்துக்கொண்டு

பொங்கிப்பெருகும்.

தமிழும் பெரியாரும்

ஒரே நெருப்பின் எண்ணக்கீற்றுகளடா!

புரிந்து கொள்ளடா தமிழா!

தெலுங்கோ கன்னடமோ

தமிழ் கொளுத்திய 

ஊழித்தீயடா பெரியார்.

சமுதாய அநீதிகளை அழிக்கும்

பெரியாரியமே

பொன் சுடர் தெறிக்கும்

தமிழியம்!

தமிழியம் வழியே 

பெரியாரியம் வெல்லும்.

பெரியாரிய ஒளியில்

தமிழியம் சுடரும்!


__________________________________________‍

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக