திங்கள், 30 செப்டம்பர், 2024

லட்டு


லட்டு

________________________________


லட்டும் பரிகாரமும்

தோஷ நிவர்த்தி நாடகமும்

நடந்த பிறகும்

மரா மரா என்று
மாற்றிச்சொன்னால் தான்

புரிந்து கொள்ளமுடிகிற‌

ஒரு வேடனின்

அம்பும் மானும் தைத்துக்கிடக்கும்

இறைச்சி நாற்றம் அடிக்கிற‌

அந்த ராமாயணத்தை

என்ன செய்யப்போகிறார்கள்?

தீக்குளிப்பா?

"ஜலத்தெளிப்பா"?

வேடன் கணணப்பன் தான்
வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை
சிவன் பசியாற வேண்டும் என்று
படைத்தானாமே.
அவன்
சிவலிங்கத்தின் கண்களில்
ஏற்பட்ட பிணியை அகற்ற
தன் கண்களையே பெயர்த்து வைத்தானாமே.
அப்படி
சிவலிங்கத்தை தீட்டுப்படுத்தையதைப்
போக்கும் பரிகாரமாக‌
என்றைக்கு அந்த‌
சிவன் மீதே
"ஜலம்"தெளிக்கப்போகிறார்கள்? போகிற போக்கைப்பார்த்தால்

இந்து மகா சமுத்திரம் கூட‌

இந்து மகா பசுமூத்திரம்

என்று

தேசிய அகராதியில்

அச்சுப்பிழை திருத்தம்

கொண்டு வந்தாலும்

கொண்டு வந்துவிடுவார்கள்.

அறிவு என்றால் தீ.

அந்தத் தீ பரவட்டும்.

இருட்டுகள் தொலையட்டும்.
_____________________________________
செங்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக