செவ்வாய், 3 செப்டம்பர், 2024

அவளே "தினகரி"

கவிஞர் பிரபு சங்கர் அவர்களின்


"அவளின் தினசரி" கவிதைத்தொடர்


பற்றிய ஒரு கவிதை.






அவள் ஒரு "தினசரி"


_____________________________‍‍‍




அவள் ஒரு "தினசரியா?"


சுடச்சுட‌


பக்கத்துக்குப்பக்கம்


வினாடிக்கு வினாடி


அச்சேறிக்கொண்டிருக்கும்


செய்திச்சுநாமி அல்லவா அவள்?

உங்களை 

சுருட்டி மடக்கி எறிந்துவிடும்

புயலும் அவள்.

உங்களை

ஆயிரம் சிகரத்தின் உச்சிக்கும்

உயர்த்தும்

மகிழ்ச்சி மத்தாப்பும் அவள்!

அது சரி!

சூரியன் என்று ஆண்பால்

இலக்கணம் 

வகுத்தவன் எவன்?

இவள் தானே

வெளிச்சமும் வாழ்க்கையும் 

தரும் மையப்பேரொளி

எனும் "சூரியள்".

ஆகவே 

அவள் தினசரி மட்டும் அல்ல‌

அவளே "தினகரி"

உங்கள் தொடர்

ஒரு உல்லாசமான நீலகிரியின்

குன்னூர் சக்கர ரயில் வண்டித்தொடர்.

கனவுகளும் நடப்புகளும்

ஊடு ஊடு வந்து

மேகங்களாய்

கிச்சு கிச்சு மூட்டும்

சொற்சித்திரம்.

எங்கள் முக நூல் முற்றத்தில்

தினம் தினம் ரசனையோடு

வீசப்படும் அந்த‌

"தினசரி" கள் தொடரட்டும்.

வாழ்த்துக்கள்!

_________________________________________

சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக