ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

அகவை எண்பது.



என் அகவை

எண்பதை கடந்ததில்

அகமகிழ்வின்

ஆழி அலைகளை

அன்புடன் பொழியும்

எல் ஐ சி ஓய்வு

ஊதியர் சங்கத்

தோழர் பெருமக்களுக்கு

நன்றி!நன்றி!

அன்புநிறை நன்றி!!

ஆயுள் காப்பீட்டு ஆலமரம்

இலைகள் கவித்த
குடை மட்டும் அல்ல.

இந்திய இதயம்

ஒன்றே என
துடித்துக்காட்டும்

போராட்ட‌ வெற்றியின்

இமயமும் இதுவே

உயர்ந்து நிற்கும்

உறுதியும் இதுவே

அறிவீர் அறிவீர்!

எங்கள் ஒற்றுமை

என்றும் வெல்லும்.

அன்புடன்
இ பரமசிவன்.
01.09.2024
_______________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக