வியாழன், 12 செப்டம்பர், 2024

சமூகப்போராளி



சமுதாயத்தோடு போராடும் வீரம்

எவருக்குமே இல்லை

மார்க்சிய சித்தாந்தவாதிகளைத்

தவிர.

அந்த போராட்டம் என்பது

சமுதாய முரண்களை 

தட்டி நொறுக்குவதே ஆகும்.

முரண்கள் முரண்களைதானே

விளைவிக்கும்.

இந்த தெளிவு உடைய‌

ஒப்பற்ற சமுதாயப்போராளியே

தோழர் சீத்தாரம் யெச்சூரி அவர்கள்.

பேரிழப்பு என்று

மோவாயைத்தடவி விட்டுக்கொண்டு

இதுவும் கடந்து போகும் என்று

சீக்குப்பிடித்த கவிதை எழுதிக்கொண்டு

பேனாவோடு சொடக்கு போடுவது அல்ல‌

அந்த 

"செவ்வணக்கம்"

அந்த மனிதனின் ஏக்கமே

நம் எல்லோருக்கும்

வெளிச்சம் தரும் 

எரிமலை ஏக்கம்.

மானிட அநியாயங்கள்

பூண்டற்றுப்போக‌

நம்மிடையே

மிச்சமிருக்கிற‌

அந்த சமூகப்போராளியின்

மூச்சுகளே

வெடித்துக்கிளரும் பேச்சுக்கள்.

அறச்சீற்றத்தின் வீச்சுக்கள்.


_____________________________________

செங்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக