ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

சேயோன் கவிதைகள்

 


சேயோன் கவிதைகள்

_________________________________‍



மண்புழுக்களாகத்தான் 

நெளியவிட்டான் 

எப்படி எழுந்தன தீக்கொளுந்துகள்?


எழுத்தாளன்.

______________________________________1


நிகழ்வுகள் தோலுரிந்து தான்

இதயத்தைத் 

தொட்டுப்பார்த்தது.


வரலாறு

________________________________________2


ரத்த ஆறுகள் எல்லாம்

அதன் அர்த்தத்தை அழித்துவிட்டன.

இன்னும் புரியவில்லை.


விடுதலை

______________________________________________3


எழுத்துக்களைக்கொண்டு நடந்தன

குடை ராட்டினமும் 

ரங்க ராட்டினமும்.


புத்தகக் கண்காட்சிகள்.

______________________________________________4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக