ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 33

 அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்

பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்

அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்

சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;

நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5

ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்

நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய

வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் 10

சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று

அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,

பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,



அகழ்நானூறு

____________________________________________________

சொற்கீரன்.


பிறைமருள வாங்கு வெண்கோட்டு வேழம்

வேங்கை வெள்வீ அடர்சொரி மூழ்க‌

அறைபறை பரற்கண் வெள்ளிய ஊர் 

அத்த நீளிடை முள் தூங்கு இலையின் 

இலவம் திரித்த நச்சின் அரவம் 

வெரீஇயத் தந்த வெள்நள் ஆறு

கவலை உறுத்தும் ஊசிநுண்மணல்

உழந்தும் உலையா வாங்கமை வெற்பன்

தும்பி ஊது தூம்பின் நுண்கால் நறவென‌

அவள் நகை கொள்ளை இன்புறுவான்மன்

மற்று எவன் செயும் தீ ஊழ் நீடு இப்பாழாறு.


____________________________________________



குறிப்புரை

______________________________________

மாமூலனார் எனும் நம் ஒப்பற்ற சங்கப்புலவர் பாடிய அகநானூற்றுப்பாடலில் (115)

"பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை," என்று தலைவன் பொருள்தேடி செல்லும் 

வழியில் நிலாப்பிறை போன்ற வளைந்த் கொம்பு உடைய யானை இடைமறித்து அச்சம் காட்டுவதாகவும் 





சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, 15

நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,

நம் நீத்து உறையும் பொருட்பிணிக்

கூடாமையின், நீடியோரே.



பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகம்...115

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக