வியாழன், 13 ஏப்ரல், 2023

இல்லை

 


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.






இல்லை
இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு
தை திங்கள் முதல் நாள்
தமிழ் மலர் இதழ் திறக்கவில்லை
என்கிறீர்களா?
சரி.சொல்லிவிட்டுப்போங்கள்.
இப்படித்தான்
அனல்வாதம் புனல்வாதம் என்று
தமிழைப் படுகொலை செய்தார்கள்
தமிழ்ப்பகைவர்கள் அன்று.
இன்னும் 
அந்த சுடுகாட்டுப்புகைமூட்டத்தில் தான்
சூடம் சாம்பிராணி 
கொளுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
உலகம் பரவிய எல்லா ஒலிப்பிஞ்சுகளிலும்
தமிழே இலையாய் கிளையாய் பூவாய்
மகரந்தங்கள் தூவிக்கொண்டிருக்கின்றன.
இந்த தமிழுக்கு 
சமமாக ஒரு மொழி செய்ய முயன்று
இயலாமல் 
அது வழக்கும் இறந்து
முழி பிதுங்கிய கூச்சல்கள் தான்
"சமக்கிருதம்".
இந்த இரைச்சல்களுக்குள்ளும்
ஒலியின் அதிர்வு எண்கள் 
அலைவிரிக்கும் 
அந்த நுண் தமிழ் ஒளி
அவிக்கப்படவே முடியாது என்பதே
இந்த சித்திரை மத்தாப்புகள்!
_________________________________________
சேயோன்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக