சனி, 15 ஏப்ரல், 2023

ஈரோடு தமிழன்பன்..2

 

ஈரோடு தமிழன்பன்..2

_____________________________________



ஈரோடு தமிழன்பனைப் படித்துவிட்டால்

அப்புறம் 

மனசு எங்கும் நகர்வதாயில்லை.

மைல்களைக்காட்டி

என் பயணம் என்னை பயமுறுத்தி

கூப்பிட்டபோதும்

நான் நகர்வதே இல்லை.

ஆம்.

இப்போது என் வயதுகள் கூட‌

அவன் கவிதையோடு 

ஒட்டிக்கொண்டு கிடக்கிறது.

ஆயிரம் யுகங்களைக்கூட‌

ஒரு நிறுத்தற்குறியில்

அல்லது அவனுக்கே உரிய‌

சொல் இடைவெளியில் நிறுத்தி

பிரபஞ்சங்களை தராசில்

ரூபாய்க்கு பத்து கிலோ என்று

பேரம் பேசும் வல்லமையாளன்.

அவன் எழுத்துக்களை வருடிப்பார்த்து தான்

வள்ளுவன்

"பீலி பெய்ச் சாகாடும்..."என்று

போட்டிருப்பானோ?

கவிஞரும் புலவரும்

டைம் ட்ராவல் செய்வதை நானும்

உணர்ந்து வியக்கிறேன்.

ஈரோடு எனும் இவன் ரோடு

தமிழ் பிக் பேங்கின்

முதல் மைல்கல்லை நட்டு வைத்திருக்கும்

புள்ளியிலிருந்து

என்னைப் பிய்த்துக்கொள்ள‌

முடியவே இல்லை.


____________________________________________‍

சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக