புதன், 5 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 34

 அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்



எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக