வியாழன், 13 ஏப்ரல், 2023

மாங்குடி மருதன்






புணரி விலங்கின் அகல் இரு முந்நீர்
விசும்பு தோய் உருகெழு திரைகள் மேவ‌
குடமும் குணமும் கைக்கொளீஇய‌
துறையாவும் சூழ்முற்றிய செருவின் 
திருவாய் கிழி துணி நுடங்க முரல்வ‌
முடித்து நெடுநிலம் பற்றிய பின்
நிலம் தரத் தெரிந்து குடையும் திருப்பிய‌
செங்கொற்றச் செழும்பேர் பாண்டியன்.
மதுரைக்காஞ்சியின் மாங்குடி மருதன்
மறம்படுத்த மள்ளற் பாண்டியன்
மடம்படுத்த கேண்மையின் ஒருபால்
அடர்செறி செரு ஆங்கு வென்றிட்ட போதும்
தோற்றவருக்கே நிலம் மீட்டு ஈந்தனன்.
தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுண்டு
தமிழ் வேள்வி சிறக்கவே நிலந்தரு திருவின்
நெடியோன் ஆயினன் பல்யாக சாலை
முதுகுடுமியின் கொற்றவனும் ஆயினன்.

நான் மறையை திறந்தால்  தெரிவது
தமிழே தமிழே தமிழன்றி வேறிலை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக