புதன், 12 ஏப்ரல், 2023

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

_______________________________________


கம்யூனிசம் என்ற‌

தீப்பந்தத்தைக் கண்டு

வெருண்டவர்கள்

அட அது கையில் 

கொளுத்தக்கொடுத்திருக்கும்

நம் விடியல்டா!

நம் நிழல் இருட்டே

நம்மை பூதம் காட்டி பேய் காட்டியதை

தெளிய வைத்த பெரும்பேரறிஞன்

நம் பட்டுக்கோட்டையார்.

என்னவோ 

எம் ஜி ஆர் தான் 

வாயசைத்தார்.

ஒலி கொடுத்த டி எம் எஸ் கூட‌

தாஸ் கேபிடலை 

பக்கம் பக்கமாய் 

வாசித்துக்காட்டியதைப்போல்

வியப்புறச்செய்தவர் 

பட்டுக்கோட்டையார்.

வயிறு இருக்கட்டும்

வயதைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளும்

சுய‌நலம் எனும் 

அழுக்கை நீக்கி வாழ்ந்தவர் 

அல்ல அல்ல 

இறந்து வாழ்ந்தவர்.

நம் தமிழ் மண்

தன் சிந்தனைவரிகளால் உழுது

பயிர் செய்து கொள்ளட்டும் என்று

மனிதம் சுடரும் அரசியலை

விவசாயம் செய்தவர்.

நம் தமிழ்நாட்டின் கொள்கைப்புலவன்

இவனன்றி வேறு யார்?

இவனுக்கு

கரன்சிகளின் டெண்டர்களில்

கறை படுத்தப்படாத‌

ஒரு "மணி"மண்டபம் நாம் கட்டுவோம்.

அதற்கும் ஒவ்வொரு

"செங்கல்லாக"அடுக்க வேண்டும்.

ஆம்.

நம் ஓட்டுக்கள் தான் அவை.

அவன் பாட்டுக்கள் 

நம் கூட இருக்கும்.

பயப்படாதீர்கள்.


_____________________________________________‍

செங்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக