செவ்வாய், 25 ஏப்ரல், 2023

தேடத்தான்....

 தேடத்தான் வந்திருக்கிறேன்

____________________________________________________________________


 தேடத்தான் வந்திருக்கிறேன்

என்று நான் 

தெரிந்து கொண்டதே 

ஒரு முட்டுசந்தை 

தேடி தேடி வந்து

முட்டிக்கொண்ட போது 

"கைவல்யம்"

என்றார்கள்.

கேவலம் என்பதன் 

பெயர்ச்சொல் அது.

கீழான நாலாவது அஞ்சாவது

வர்ணம் தானே.

இன்னும் அந்த தேவ பாஷை

தீட்டுப்படாமல் இருக்க வேண்டுமென்றால்

அவன்களுக்கு பெயர்கள்

மண்ணாங்கட்டி..

மண்ணுதின்னிதானே!

கடவுளை..மனிதனை

இதைவிட

கொச்சைப்படுத்தமுடியாது.

சீ..கேவலம் 

உங்களுக்கு எதற்கடா

ப்ரம்மமும் நாராயணமும்

என்று சொல்வது போல் இல்லை?

கைவல்யம் என்றால் 

அப்ப்டித்தான் இரைச்சல் காட்டுகிறது.


___________________________________________________

ருத்ரா

முட்டிக்கொண்ட போது தான்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக