புதன், 12 ஏப்ரல், 2023

சொல்காப்பியம்

 


சொல்காப்பியம்


அகந்தையை அழியுங்கள்.உடலை விட்டு உள்ளத்தை உரித்தெடுங்கள்.பிறவி எதற்கு?அதனாலே தானே மரணம் வருகிறது.உலகம் பூராவும் "மட்டையாய்" மல்லாந்து விடவேண்டும்.இப்போது தெரிவதே சொர்க்கம் பிரம்மம் இத்யாதி இத்யாதி....

ரமண மகரிஷி இப்படித்தான் "நான்" என்பதை உரித்துப்போட்டுவிடச் சொன்னார்.ஆனல் அது கழன்று கொண்டதாக தெரியவில்லை.அந்த "அகந்தை"யை மேலை நாட்டினார் ஈகோ என்று கூராக தீட்டி தீட்டி இப்போது அவர்கள் விண்வெளியையே சுருட்டி மடக்கி தங்களுக்கு கைக்குட்டை ஆக்கிக்கொண்டார்கள்.நமது தத்துவங்கள் இதற்கு நேர் எதிர்.முதலில் சொன்னது இரண்டாவதாய் சொன்னதற்கு முரண்படும்.அடுத்தது அடுத்ததற்கு முரண்படும்.இப்படி பரிணாம் அடைவது அறிவியலின் இயல்பு.நாம் கடவுள் என்று ஆரம்பித்தது இப்படித்தான் செத்த பாம்பாய் ஆகிப்போனது.ஆனால் அதற்கு இன்னும் இங்கே கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும் தூள் பறக்கின்றன.அறிவின் பரிணாமம் கூட நமக்கு இன்னும் புரியாத சமாச்சாரம் தான்...................ருத்ரா

____________________________________

13.04.2023











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக