ஊர்க்காடு சாத்தா அங்கிருந்து
பார்த்துக்கொண்டே இருந்தார்.
எத்தனை
முழுக்குகள் போடுகிறேன்
என்று
அந்த தாமிரபரணி
சொரிமணற் குளியலில்?
அப்புறம்
எனக்கு
அவரும் தெரியவில்லை.
அவருக்கு
நானும் தெரியவில்லை.
கோலிக்குண்டு விழிகளில்
அருகே அந்த வெள்ளாடுகள்
மேய்ந்து கொண்டிருந்தன.
______________________________________
பொருநைத்துறைவன்.