POEMS TEMPLATE
"KAVITHAIPPATTARAI"
___________________________________________________________________
____________________________________________________________________
இதயத்தின்
தாகத்துக்கு யாரோ இன்னொருவர்
இதயம் தேவைப்படலாம்
அதற்குப் பதிலாகநாட்டு வரைபடத்தில்
ஓடும் நதியை அழைத்துவரவா
கண்களின்
தவிப்புக்கு யாரோ ஒருவர்
பார்வையில் தீர்விருக்கலாம்
அதற்குப் பதிலாகத்
தூரிகை வாசலிலா
கண்கள் வரையச்சொல்லிக்
காத்திருப்பாய்?
காதுகளின்
ஏக்கத்திற்கு யாரோ ஒருவர்
குரல் வேண்டியிருக்கலாம்
அதற்கு மாற்றாகப்
படங்களில் நடிகர்களுக்குக்
குரல்கொடுப்போர் சங்கத்திலா
பதிவு செய்துவைக்கப்
பறப்பாய்?
கைகளுக்கு
யாரோ ஒருவர் கைகளைப்
பற்றிக்கொண்டு வாழ்க்கை முழுக்க
நடக்க ஆசை இருக்கலாம்
அதற்காகச் சோதிடம் பார்த்து
வங்கிப் பேழை திறந்த
கைகளுக்காகவா
அலைந்துகொண்டிருப்பாய்?
22-4-2025மாலை 6-30
தலைப்பு. யாரோ ஒருவர்
22-4-2025ல்
"யாரோ ஒருவர்"
என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவிதை தந்த
வெளிச்சம் இது.
________________________________
சொற்கீரன்
எதுக்கு எது நேர்?
உருள்கிறது
சொற்களின் தேர்.
கவிஞரின்
சிந்தனை "வெலாசிடி"
அண்டங்கள் ஆயிரம்
சட்டென்று
ஊடும்... துளைக்கும்!
குயில்கள் கூட
"குரல் கொடுபோர்"
சங்கத்திலா போய்
இசைக்கூடு கட்டும்?
என்ன
நெத்தியடிக்கருத்து?
கவி இமயமே!
உங்கள் சொற்கள் ஊற்றில்
தான்
இந்த கங்கோத்ரிகள்
தண்ணீர் மொள்ள
ஓடி வரும்.
ஆற்றுப்படைத் தமிழுக்கெல்லாம்
ஊற்றுப்படை அல்லவா
உங்கள் தமிழ் வீச்சு!
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக