"கல் பொரு சிறுநுரைகளாய்"
_____________________________________
நரை மகுடம் சூட்டி
ஆண்ட ஆண்டுகளின்
விளிம்பில்
ஒரு கடலோரம்....
வாக்கிங்!
கிளிஞ்சல்கள் ஒதுகிங்கின.
பவளப்பாறை
எலும்புச் சிதிலங்களும் தான்.
அவலங்களும்
அழிவு அந்தியின் அச்சத்து
மிச்சங்களும்
"கல் பொரு சிறுநுரைகளாய்"
கரைந்து சிதறின.
"வாக்கு" இழந்த குரல்களின்
நாளைய நிழற்சித்திரங்கள்
உள்ளே இறந்து
ஓலங்களை வேதம் ஓதின.
அலைகள் மட்டுமே
அங்கு கொந்தளித்தன.
ஏனென்றால்
அவை தினமும்
உப்புப்போட்டு
சாப்பிட்டிருக்கிறன.
ஆம்.
உப்பை மட்டுமே
சாப்பிட்டிருக்கினறன்.
அதனால் அவற்றின் அர்த்தம்
உணர்ச்சிகள் உணர்ச்சிகள்
உணர்ச்சிகள் மட்டுமே தான்.
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக