மாந்தோட்டக்காவலர்களே!
பழங்களின் மகசூல் குறைந்தது பற்றி
கவலைப்படுமுன்
அதோ அந்த
அந்த பூக்களும்
புலம்புவதைக்கேட்டீர்களா?
எண்ணி எண்ணி
மில்லியன்கள் கணக்கில்
அல்லவா
மகரந்தங்களை
தூவினோம்.
அவ்வளவு எங்கே போயிற்று?
அந்த "தங்க"க்கனவுகளின்
சேதாரம்
வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகுகளில்!
_________________________________________18.04.25
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக