வெள்ளி, 18 ஏப்ரல், 2025

மாந்தோட்டக்காவலர்களே!

 

மாந்தோட்டக்காவலர்களே!
பழங்களின் மகசூல் குறைந்தது பற்றி
கவலைப்படுமுன்
அதோ அந்த‌
அந்த பூக்களும் 
புலம்புவ‌தைக்கேட்டீர்களா?
எண்ணி எண்ணி 
மில்லியன்கள் கணக்கில் 
அல்லவா
மகரந்தங்களை 
தூவினோம்.
அவ்வளவு எங்கே போயிற்று?
அந்த "தங்க"க்கனவுகளின் 
சேதாரம்
வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகுகளில்!
_________________________________________18.04.25
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக