ரத்தமெல்லாம்...
__________________________________
கட்டையாக நட்டது.
முள் ஆணிகள் குத்திக்
கிழித்த ரத்தமெல்லாம்
வடிந்த பின்
மரமாக சிலிர்த்தது.
உயிர் மின்னலின் பூக்களுடன்
சிலிர்த்தது.
எழுந்தது.
அது நம்பிக்கையா?
நம்பிக்கை என்று
ஜபமாலைகளை உருட்டி முடித்து
சிதறிப்போனால்
மீண்டும்
இந்த சிதறல்களிலிருந்து
மீண்டும் ஒரு சிலுவை மரம்
முளைக்குமே.
அதனால் நம்பிக்கை எனும்
முற்றுப்புள்ளியயை
தொலை தூரத்துக்கு
தொலந்தே போய்விடுகின்ற
தூரத்துக்கு நகர்த்து.
அது அவநம்பிக்கை என்று
கல்லெறியப்படலாம்.
நாத்திகத்தின் நச்சு மரம் என்று
இவர்கள்
ஆற்றல் வாய்ந்த
ஏவுகணைகளைக்கொண்டு
தகர்க்க முன் வரலாம்.
வரட்டும்.
அறிவின் பிரபஞ்சங்கள்
கோடி கோடியாய்
சைக்ளிக் பாய்ச்சல்கலாய்
ஓடிக்கொண்டே இருக்கும்.
பாருங்கள்
இந்த "இன்ஃபினிடியும் சீரோவும்"
இவர்களை
படுத்துகிற பாட்டை!
கணிதத்தின் சிகரம் எங்கோ
உயரம் என்பதையே கூட
விழுங்கித்தீர்த்து விட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஒன்று இரண்டு மூன்று...
போதும் எண்ணிக்கொண்டிருந்தது
என்று
எண்ணியலின் ஒரு ராட்சச நுண்ணியத்தை
அப்ஸ்ட்ராக் அல்ஜீப்ராவாய்
உதிர்த்துக்கொண்டே போகிறது.
அந்த "ராட்சச நிலவொளியை"
அதாவது "மான்ஸ்ட்ரஸ் மூன்ஷைனை"
கணிதப்பொறிக்குள்ளும்
முட்டையிட்டு..
புள்ளி புள்ளியாய்..
"இந்த கோடிட்ட இடத்தை நிரப்பும்"
ஒரு உச்ச பட்ச "மேத்ஸ் ஒலிம்பியார்டாய்"
போய்க்கொண்டே இருக்கிறது.
அவநம்பிக்கைகளை கவ்விக்கொண்டு ஓடும்
நம்பிக்கைகளாய்..
நம்பிக்கைகளை செறித்துக்கொண்டு
பரவும் அவ நம்பிக்கைகளாய்..
தொடர்கிறது.
அவ நம்பிக்கை சைத்தானின்
தீனியா? அசுரப்பசியா?
அதோ ஓடுகிறது..
அது ஆண்டவமா?
ஆண்டவம் தாண்டிய
அறிவின் தாண்டவமா?
மனிதம் மலர்ச்சியில்
மேலும் மேலும்
வெளிச்சம்
காட்டிக்கொண்டே போகிறது.
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக