திங்கள், 14 ஏப்ரல், 2025

கனவுக்குள் கனவுகளையா?

 


எது வரை நான் 

உன்னை 

நினைத்துக்கொண்டிருப்பது?

விளிம்புகள் 

நொறுங்கி விட்டன.

எல்லைகள 

தொலைந்து போய் விட்டன.

ஏன் இந்த மலைப்பு?

எங்கு வேண்டுமானாலும்

உன் முற்றுப்புள்ளியை

முட்டையிட்டுக்கொள்.

அப்படியா

என்று நான் நோக்குவதற்குள்

அந்த தட்டாம்பூச்சி

என்னைக்கவ்விக்கொண்டு

கண்ணாடிச்சிறகுகளை

சிலிர்த்துக்கொண்டு ஓடியது.

வானம் கூட கீழே

பொடிப் பொடியாய்...

எதைத்தேடினேன்?

கனவையா?

கனவுக்குள் கனவுகளையா?

_________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக