போதும்.
___________________________
எதுகைகள் வேண்டும் என்பதற்காக
மோனைகளின் தலைகளைத்
திருகிக்கொள்வதா?
கவிதைகள் எழுத வேண்டும்
என்பதற்காக
அந்த பனைமரத்தின் உச்சியில்
போயா
நட்சத்திரங்களைப்
பறித்துக்கொண்டிருப்பாய்?
காதலிக்க ஊறும்
சுரப்பிகளுக்காக
பட்டாம்பூச்சிகளையா
"கஷாயம்"வைத்துக்குடிக்க
வெறி பிடித்துக்கொள்வாய்?
நானே எல்லாம்.
நானே பிரம்மம் மற்றும்
பிரபஞ்ச பைத்தியக்கார ஆஸ்பத்திரி
என்று சொல்லிக்கொண்டா
"ஸ்லோகங்களை"
கொப்பளித்துக்கொண்டிருப்பாய்?
முற்றி விட்டது.
போதும்.
போர்வைகளை வீசியெறி.
சோழிகள் குலுக்கிச் சொன்னது போதும்.
முட்டுச்சந்து வந்து விட்டது.
கடவுளை நீ காட்டியது போதும்.
எழுத்துக்கள் என்று
அனக்கோண்டா குட்டிகளை
தினம் தினம்
குஞ்சு பொறித்துக்கொண்டிருந்தது
போதும்.
பேனாவை முறித்துப்போடு.
_____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக