உருட்டுவதே...
_______________________________
ஒவ்வொரு
ஆண்டாக
ஒவ்வொரு
மாதமாக
ஒவ்வொரு
நாளாக
ஒவ்வொரு
மணியாக
மணித்துளியாக
ஜபமாலையை
உருட்டுவதே
வாழ்க்கை.
கைகள்
உன் கைகள் அல்ல.
வாழ்க்கையும்
உன் வாழ்க்கை அல்ல.
பின் எதற்கு அந்த
காலப்பாம்பு?
அது சட்டை உரித்துப்
போட்டு விட்டுப் போனதே
கடவுள்.
காலத்தை
சோதனைக்கூடத்தின்
சோதனைக்குழாயில்
சோதித்துப்பார்.
இயற்பியல் கணிதத்தின்
சமன்பாட்டுத் தீர்வினைப்பார்.
உருவெளி காட்டுவதை
விசுவரூபம் என்று
சொல்லிக்கொள்!
கருந்துளையின் வாசற்படியில்
எதுவும் இல்லை
காலம் உட்பட.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக