நீயும் நானும் ஒண்ணு தான்.
எதிலிருந்து நீ வந்தாய்..
அதிலிருந்தே நானும் வந்தேன்.
நம் இருவரில்
யார் தன்மை?
யார் முன்னிலை?
படர்க்கையான
மனங்கள் மட்டுமே அறியும்.
அதுவே நீ எனறு அறி.
அதுவே நான் என்று அறிகிறேன்.
மூன்றாமவன்
மந்திரம் ஓதிக்கொண்டிருக்கட்டும்.
அத்வைதம் என்று
சமஸ்கிருதம் சொல்கிறது.
அதாவது
புரியாமலே இரு.
அது போதும்.
"என்னது
நீயும் நானும் ஒண்ணா?"
கழுத்து நரம்புகள் புடைத்தன?
நாலு வர்ண
கற்பூரம்
நாலாயிரமாய் எரிந்தது.
___________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக