கல்லிடைக்குறிச்சி திரு ராஜகோபாலன் அவர்களே
நம் ஊர் தாமிரபரணியின்
பளிங்கு பக்கங்களில் எல்லாம்
கல்லிடைக்குறியின் கவிதைகள்
திருப்பி திருப்பி
வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
உணர்வுகளே
எப்போதும் அலை மோதும்.
அதிலும்
அந்த பஸ்டாண்டு பஞ்சாயத்து ஆபீஸ்
சந்திப்பு
அந்த நாவல்
"புளிய மரத்தின் கதையை"தான்
எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டே
இருக்கும்.
நான் 1950களின்
திலகர் வித்யாலாய மாணவன்
என்பதில்
எத்தனை எத்தனை
"ஓர்மை' நிறைந்த
கோணங்களை விரித்துக்காட்டும்
என்பதை
இன்றும் நினைவு கூர்வேன்.
அகத்தியர் கோவில் விழா.
எங்கள் குமாரர் கோவில் தேர்த்திருவிழா.
பெருமாள் கோயில்
"கெருட சேவை."
தளச்சேரி மானேந்தியப்பர் கோயில்
திருவிழா.
இதெல்லாம் தான்
அந்த "சவ்வு மிட்டாய்" இனிப்புகள்.
வாழ்க்கையின் தத்துவம் என்பதற்கு
இவையெல்லாம்
பொம்மை விளையாட்டுகள் தான்.
மனிதநேயத்தின்
உண்மை ஒளி
தமிழனின் உணர்வுமொழி
இவையெல்லாம்
அந்த சிந்துவெளிச்சித்திரங்களின்
தூரிகைக்கீற்றுகளாய் வருடிக்கொடுப்பதாய் தான்
அந்த கல்லிடைக்குறிச்சியின்
பனங்குட்டிகளின் ஓலைச்சுவடிகளில்
நான் உணர்கின்றேன்.
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை
பரிமாறிக்கொள்ளும்
இந்த தருணங்கள் எனக்கு
மிக மிக உவப்பானவை.
வாழ்க நீவிர்! நீடூழி.
________________________________________
இ பரமசிவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக