செவ்வாய், 15 ஏப்ரல், 2025

வைரமுத்து வீட்டுக்கல்யாணம்.

 


வைரமுத்து வீட்டுக்கல்யாணம் (விஜய் டி.வி யில்)

இன்பாக்ஸ்

ருத்ரா (இ.பரமசிவன்

6 மார்., 2012, 1:30 PM
பெறுநர்: அன்புடன்
வைரமுத்து வீட்டுக்கல்யாணம் (விஜய் டி.வி யில்)
======================================================ருத்ரா
epsivan@google.com >

செல்வன் மதன் கார்க்கி
செல்வி நந்தினி
இவ‌ர்க‌ளின் திரும‌ண‌ம்
இனிய‌ ம‌ங்க‌ல‌ம் பொங்கிய
இத‌ய‌ங்க‌ளின்
இன்ப‌த்திருவிழா.


இன்று
வைர‌முத்துவின் கையில்
இருப்ப‌து
காகித‌மும் பேனாவும் ம‌ட்டுமே.

ம‌த‌ன் கார்க்கி...ந‌ந்தினி
கவிதையான பிறகு
இனி எதற்கு இவருக்கு
எதுகை மோனைகள்?

கார்க்கியும்
"க‌ணினிய‌ன் பூங்குன்ற‌ன்" தான்.
எந்திர‌னின்
"இரும்பும்" தூவிய‌து
 காத‌ல் ம‌க‌ர‌ந்த‌ங்களை!
"பூலிய‌ன் அல்ஜீப்ரா"
புரியாத‌வ‌ர்க‌ளுக்கும்
"பைன‌ரி மொழியை"
ப‌டிக்காத‌வ‌ர்க‌ளுக்கும்
காத‌லியின்
இரு க‌ண்க‌ளே
க‌ம்பியூட்ட‌ர் வ‌குப்புக‌ள்.

செல்வ‌ன் கார்க்கி
கல்வி பெறும்போதே
கங்காரு தேசத்தில்
க‌ங்கை போல‌
க‌விதை ஒன்றை
வலைப்பூவில்
கண்டெடுத்த
க‌ண்ம‌ணியே
செல்வி நந்தினி.


தன் மகனை
க‌ல்வி பெற்ற‌வ‌ர்க‌ளின்
"அவைய‌த்தில்" ம‌ட்டும் அல்ல‌
க‌விஞ‌ர்க‌ளின்
"அவைய‌த்திலும்" கூட‌
முந்தியிருக்கச்செயல் புரிந்த‌
பெருமித‌த்தில்
த‌ந்தை அங்கு
பூரித்து நின்றிருந்தான்.

க‌ல்யாண‌ வீட்டிலும்
அவ‌ன் ஒரு க‌தை சொன்னான்.
ஒரு வ‌ரிக்க‌தை அல்ல.
ப‌ல‌ வ‌ரிக‌ளில்
வாழ்க்கைச் சாட்டை
அடிக‌ள் த‌ந்த‌ வ‌ரிக‌ள் அது.
சொன்ன‌தும் கூட‌
க‌ண்க‌ளின்
ப‌ளிங்கு அருவியை
ப‌க்குவ‌மாய்த்
துடைத்துக்கொண்டே.

அது
கிளிஞ்ச‌ல்க‌ளாய்
ஒதுங்கி
க‌ரையேற‌ ம‌றுத்து
க‌விதைக்க‌ன‌வின்
வைர‌ம்பாய்ந்த‌
ஒரு வைர‌முத்துவின் க‌தை.

க‌விஞ‌னுக்கு
ர‌த்த‌மும் ச‌தையும் கூட‌
அவ‌ன் உள்ள‌ம் தான்.
அத‌னால் தான்
அந்த‌ நிப்பு முனை
கீறும்போதெல்லாம்
முள்ளை
ரோஜா என்று
க‌விதை எழுதுகிறான்.

அன்று ஒருநாள்
தூங்க‌ப்போகும் சூரிய‌னின்
"பொன் மாலைப் பொழுதில்"
த‌ன் எழுத்துச்சூரிய‌னை
எழுப்பிவிட்டான்.
"நிழ‌ல்க‌ள்"
அவனது வெளிச்ச‌ம் ஆகிய‌து.

"பூம‌ர‌ங்க‌ள்..சாம‌ர‌ங்க‌ள்"
முத‌ன் முத‌லிலேயே
புதுமையாய் பூத்த‌வை அல்ல‌வா
அக்க‌விஞ‌னின் வ‌ரிக‌ள்!

முத்துக்கு
சிப்பி உண்டு.
வைர‌மே சிப்பியாகி
வைர‌மே முத்துமாகி
வைர‌மே க‌விதையான‌
உருவ‌க‌மே
வைர‌முத்து.

இல்லம் இல்லை
அக்கவிஞனின் இல்லம்.
கவிதைகளால் அடுக்கி
கவிதைகளால் சாந்து பூசி
கவிதைத்தூண் நிறுத்தி
கவிதைகளால் செய்த
தேசம் அது.


அன்று கோட‌ம்பாக்க‌மே
அங்கு குவிந்தபோது
த‌ன் இத‌ய‌ம் கொண்டு
சாம‌ர‌ம் வீசினான்
சான்றோன் வைர‌முத்து!

திரைப்ப‌ட பாட‌ல்க‌ள் கூட‌
திருப்புமுனை ஏற்ப‌டுத்தும்
மைல் க‌ற்க‌ளை அல்ல‌வா
அவ‌ன் ந‌ட்டு வைத்தான்.

இது வ‌ரை
அரிதார‌ம் பூசி
ந‌டித்த‌வ‌ர்க‌ள் எல்லாம்
இப்போது இவ‌ன்
வ‌ரிதார‌ம் பூசித்தானே
ந‌டிக்கிறார்க‌ள்.

இசை அமைப்பாள‌ர்க‌ளின்
குழ‌லும் யாழும் கூட‌
கும்பிட்டுக்குழைவ‌தெல்லாம்
இவ‌ன் வ‌ரிக‌ளின்
அதிர்வுக‌ளுக்குத்தானே.

இய‌க்குன‌ர் இம‌யம் கூட‌
த‌ன்னை கூழாங்க‌ல் என்று
சொல்லிக்கொண்டு
"வைர‌"முலாம் பூசிக்கொண்டார்.

க‌ம‌ல் ர‌ஜ‌னி என்ற‌
ச‌க்க‌ர‌வ‌ர்த்திக‌ள் கூட‌
மெழுகுவ‌ர்த்திகள் தான்
அன்பில் உருகின‌ர்.


கவிதைகளே
காதலித்து
கல்யாணம் செய்துகொண்டு
ம‌ழ‌லைக்க‌விதைக‌ளையும்
பாலூட்டி தாலாட்டி
சிற‌ப்பூட்டி
சிக‌ர‌மேற்றி
திரும‌ண‌ம் கூட்டி வைத்து
க‌விதைப்பூக்க‌ளின்
த‌மிழ் பூத்து
த‌ழைக்கும்
த‌ங்க‌மான‌ கூடு இது.

இனி
குயில்க‌ளுக்கும் த‌னியாய்
ஒரு வேட‌ந்தாங்க‌ல்
இந்த இருவர் உள்ள‌த்தில்!

வாழ்க‌! வாழ்க‌!ம‌ண‌ம‌க்க‌ள்!


அன்புட‌ன்
ருத்ரா

=================================================================


"அன்புடன்"மின்குழுவில் நான் அனுப்பிய கவிதை இது 
வெளிவந்தது:‍
6 மார்., 2012, 1:30 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக