ஞாயிறு, 30 ஜூலை, 2023

செம்மலர்க்கூட்டமே திரண்டு வந்து...


3 பேர் மற்றும் மேடை இன் படமாக இருக்கக்கூடும்






 தோழமை செறிந்த ஆர்.கே அவர்களே


இப்படி இங்கு உங்களைப்பார்த்து

மெய்சிலிர்த்துப்போனேன்.

மனிதர்களை பல்கலைக்கழகமாக்கி

சமுதாயத்தைப் படிக்கும் 

மாணவராகவே இருந்த

ஒரு பெரும் பேராசிரியராய் அல்லவா

எங்களுக்கு நீங்கள் இருந்தீர்கள்!

அறிவு கூர்மைப்படுத்திக் கொண்டது

உங்களிடம்.

அதனால் நாங்கள் பெற்ற வெளிச்சம்

அளப்பரியது.

எங்கோ இருந்தாலும்

நீங்கள் இன்னும்

படித்துப்பார்க்கப்பட வேண்டிய‌

புத்தகமாகத்தான் 

எங்களிடம் இருக்கிறீர்கள்.

அருமைத்தோழர்கள் எனும் பூக்கள்

உதிர்ந்துவிட்ட வனத்தில் 

தனித்து விடப்பட்டதாய் தோன்றினாலும்

திடீரென்று

இன்று உங்களைப்பார்த்த போது

அந்த செம்மலர்க்கூட்டமே திரண்டு வந்து

எனக்கு 

ஒரு பூங்கொத்து நீட்டியதாய்

நான் உணர்கிறேன்.

பொங்கும் மகிழ்ச்சியில் 

மீண்டும் என் மகிழ்ச்சியை இங்கு

தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க!வாழ்க!

நீங்கள் நீடூழி வாழ்க!


இப்படிக்கு

செங்கீரன் எனும்

உங்கள் அன்பு பரமசிவன்.


_____________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக