செவ்வாய், 25 ஜூலை, 2023

தோற்றுவிட்டார்.

 தோற்றுவிட்டார்.

_________________________________________

ருத்ரா


 

படைத்துப்பார்த்து

படைத்துப்பார்த்து

பிரம்மன்

தோற்றுவிட்டார்.

அப்புறம் தூங்கிபோனார்.

விழித்துப்பார்த்த போது

அது

அவர் மூக்கின் மீது 

உட்கார்ந்து கொண்டு 

படபடத்தது.

எப்படி நீ வந்தாய்

பிரம்மன் கேட்டார்.

"நீங்கள் தூங்கிபோன இடைவெளியில்

அங்கே ஒரு அழகிய குழந்தை 

"கண் சிமிட்டியது"

அதுவே நான்!

சொன்னது "பட்டாம்பூச்சி".


__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக