செவ்வாய், 25 ஜூலை, 2023

அகழ்நானூறு 52"

 


அகழ்நானூறு 52

_________________________________________

சொற்கீரன்


நள்ளென் வான் பொதி 

முளி இருள் பொத்தி

கிழக்கின் ஒளி சூல் கிழிபடுபு 

புள்ளினம் சிறைமழை

பெயல் காட்டி திசை தொறும் 

வெண்கலி ஆர்க்கும்.

கூர் அலகு நாரை கயல்கொளீஇ

இருங்கழி அடைகரை 

ஞாழல் அஞ்சினை வாங்கு

ஒள்ளிணர் அவிழ்நறுந்தாது

வளிபடு ஆங்கு வழிபடுத்தும்மே.

பீலிவளையும் இறையின் வீழ

பசலை நோன்ற செவ்வரியாடும்

அவள் அம்பின் கூர்விழி 

அவன் ஆறு தடம் சாய்க்கும்.

பொரிஅரை ஓமை வல்சுரத்து

நிரம்பா நீளிடை அண்ணிய நத்தம்

கவலைய ஆற்றின் கவலை மாற்றி 

அவள் கண்ணின் மைவிழி  ஊர்ந்து 

கரை சேர் கலமென களி நகை புரிவான்.


-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக