புதன், 9 ஜனவரி, 2019

ஆயிரம் ரூபாய்

ஆயிரம் ரூபாய்
=========================================ருத்ரா

பொங்கல் பரிசாக‌
குடும்ப அட்டை மக்களுக்கு
அரசாங்கம்
மழை பொழிந்திருக்கிறது.
ஐந்து வித அட்டைகளில்
எந்த அட்டைக்கு
பொங்கல் வைக்க‌
பானை கூட இல்லை
எனும் நிலை?
நீதி மன்றமே
ஆராய்ச்சி மணி அடித்திருக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்த பின்
அந்த கரும்புத்துண்டில் கூட‌
இன்னொரு துண்டு
கொடுத்து விடக்கூடாதே!
தேர்தல் ரத்து செய்தபின்
அவசரமாய் இந்த கரன்சி
தூண்டில் முள்ளில்
செருகப்பட்டு விட்டது.
தேதி அறிவிக்க வேண்டிய தேவையே
இல்லாமல்
தேர்தல்  சூழ்நிலையை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
பெரும்பான்மை காட்டவேண்டிய‌
பதற்றம் இல்லை.
பரபரப்பு இல்லை.
அதைப்பற்றிய உறுத்தல் தேவையில்லை.
அரசியல் விஞ்ஞானம் என்றால்
அதன் தர்க்க வடிவமான‌
கோட்பாடுகள் எல்லாம்
பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில்
ஏதாவது இருக்குமே
அந்த "ஏதாவதையும்"கூட‌
குப்பையில் எறிந்து விடலாம்.
ஏனெனில் இலவசம் எனும்
பேய் பிசாசுகள்
பிய்த்துத்தின்ற
"ஜனநாயகத்தின்"சடல மிச்சங்களும்
அந்த குப்பையில் தான்
கிடக்கின்றன.

========================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக