சனி, 19 ஜனவரி, 2019

"கண்ணே!"

"கண்ணே!"
===================================ருத்ரா இ.பரமசிவன்

நீ பார்த்தபோது
உன் விழிகள்
என் மீது உரசுவதை
தவற விட்டேன்.
உன்னைப்பார்க்காமலேயே
அந்த உரசலில்
அமுதத்தீயின் பெருங்காடு
என்னுள் கொழுந்து விடுவதை
நான் உணர்ந்தேன்.
எதிர் எதிர் பார்க்கும்போது
என்னைப்பார்க்காது தவிர்த்து விடுவாய்
என்பது எனக்குத்தெரியும்.
அதனால்
அந்த மரத்தைப்பார்க்கிறேன்
அந்த மட்டையைப்பார்க்கிறேன்.
அந்த குருட்டுக்காக்கையையும் பார்த்தேன்.
அது அந்த
மின்சாரக்கம்பியில்
இசகு பிசகாய் பட்டுப் பொசுங்கிப்போனது!
என்ன கொடுமை இது?
அப்போது தான்
என்னை நீ பார்த்திருக்கிறாய்!
இதைத்தான்
அந்த கிறுக்குக்கவிஞன் எழுதினானோ
"மின்சாரக்காதல்" என்று!
அந்த காக்கை சாம்பலாய் போனது போனது தான்!
அதிலிருந்தா
என் காதல் "ஃபினிக்ஸ்"
சிறகு விரிக்க வேண்டும்?
வேண்டாம்..
அந்த பார்வை ஒன்றே போதும்!
உன் முன்
நான் சாம்பல் ஆகவும்
ஆயத்தமாய் தான் இருக்கிறேன்.
இதைக் கொண்டு
உன் முகப்பவுடர் ஆக்கிக்கொண்டால்கூட‌
உன் முக ஆகாயம் முழுதும் பூசி
உன் மனத்துள் விரவிக்கிடப்பேன்.
அந்த பார்வை ஒன்றே போதும்
ஆனாலும்
அந்த தீயை வடிகட்டி விட்டு
காதலை மட்டும் அனுப்பு "கண்ணே!"
என்னைப் பொசுக்கி விட‌
காதல் ஒன்றே போதும்
இரண்டு "தீ" தேவையில்லை!

===============================================
14.03.2016




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக