வெள்ளி, 11 ஜனவரி, 2019

எல்லாப்பெருமையும் கார்த்திக் சுப்பராஜுக்கே....

எல்லாப்பெருமையும்  கார்த்திக் சுப்பராஜுக்கே.....
====================================================ருத்ரா


ரஜினி நெக்குருகி நெகிழ்ந்து
சொன்ன வார்த்தைகள் இவை.

"ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே"

முள்ளும் மலரும் திரைப்படத்தில்
முத்திரை பதித்த‌
அந்த காளியை பத்திரமாக
அதே மிடுக்குடன்
அதற்கும் மேல் "மாஸுடன்"
பேட்டயில் இப்போது
ரஜினியை உலவ விட்டு
உலகத்தையே
ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்
கார்த்திக் சுப்பராஜ்.
சிறுவயதிலேயே
அவருக்குள் ஊறிப்போன‌
ரஜினியை
அப்படியே ஒரு கிம்பர்லியிலிருந்து
பெயர்த்து எடுத்த வைரப்பிழம்பாய்
பட்டை தீட்டிக்காட்டியிருக்கிறார்.

விஜய சேதுபதி
அந்த சினிமாவுக்குள்ளும்
தனக்கென்று தனியாய்
ஒரு சதுரத்தை வெட்டிக்கொள்கிறார்.
நடிப்பின் ஒரு புதுமுகம் போல்
வந்து போகிற மாதிரி தோன்றினாலும்
விழாவில்  ரஜினியே பாராட்டிய
நுட்பம் நன்றாகவே தெரிந்தது.
இது போல்
சசிகுமார் பாபிசிம்ஹா போன்றவர்களும்
படத்தை தொய்வு அடைய விடாமல்
நன்கு முறுக்கேற்றி இருக்கிறார்கள்.
வில்லனாய் வரும் அந்த இந்தி நடிகர்
நமக்கு மிகவும் சகஜமாகிப்போனது போல்
ஒரு அற்புத பாத்திரத்தை
நம் முன் காட்டிவிட்டு போய்விட்டார்.

தமிழ் சினிமாவில்
த்ரிஷாவைத்தொடர்ந்து
சிம்ரனும்
காதல்குமிழிகள் மிதக்கும்
அந்த
"இரண்டாவது வசந்தத்தில்"
நுழைந்திருக்கிறார்.
புதிய சிம்ரன் சிரிப்பில்
புதிதாய் ஒரு மின்சாரக்கவர்ச்சி.
அனால் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம்
தலை விக்கில்
வெள்ளையும் கருப்புமாய்
ஒரு "நந்தவனத்தை" மாட்டிக்கொண்டு
காதல் காட்சியையும்
கலக்கி விடுகிறார்கள்.
ஆனால் அந்த முதுமையின்
இனிமையையும் நுண்மையையும்
உணர்வின் பூக்களாய்
மழை பொழிந்து நம்மை
கிளர்ச்சியடையச்செய்வதில்
நடிகர் திலகத்துக்கு
அடுத்த படியாய் ரஜினியும்
வென்றிருக்கிறார்.
ஆனால் "ஸ்டைல் மன்னன்" என்னும்
கிரீடத்தை அவர்
கடைசி வரை கழற்றவே இல்லை.
அதிலும் நகைச்சுவையில்
புது புது மைல்கல்லை நோக்கி
ஓடுகிறார்..ஆடுகிறார்.
தியேட்டர்கள் எல்லாம்
அதிர்ந்து குலுங்குகின்றன.
இவர் அரசியலுக்கு வந்தால்....
என்ற நினைப்பையே
நம்மிடமிருந்து கழற்றியெறிந்து
வீசி விடுகிறாரே!
நடித்துக்கொண்டே ஆண்டாலும் சரி
ஆண்டு கொண்டே நடித்தாலும் சரி
அவர் ஒரு சூப்பர்ஸ்டார் தான்.

====================================================
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக