வெள்ளி, 25 ஜனவரி, 2019

மௌனம் என்றொரு தேசம்


மௌனம் என்றொரு தேசம்
=========================================ருத்ரா

சட்டென்று
கேட்க முடியவில்லை.
இதே தவிப்பும் பரபரப்பும்
அவளிடமும் தெரிகிறது.
ஆனால்
இதை கேட்டுவிட வேண்டுமென்று
நான் கண்களை
உயர்த்தியது போல்
அவள் இன்னும்
ஏறிட்டு நோக்கவே இல்லையே!
ஆனால் அந்தக்கேள்வியின்
தூண்டில் முள்
அவள் ஆழத்தில் விழுந்து
அது ஏற்படுத்திய காயம்
அவள் உள்ளத்தில்
ரத்தக்கடலை கொந்தளித்தது.
அந்த சிவப்பு
கவிழ்ந்த அவள் முகத்தில் கூட‌
ஒரு அழகு ஊட்டியது.
அது அழகா?
அவளுக்கு அல்லவா தெரியும்
அது கழுமரத்தின்
கூர்முனை என்று!
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
என்று
நான்கு கதவுகள் வைத்து
நாலாயிரம் பூட்டுகள் அல்லவா
மாட்டி வைத்துக்கொண்டிருக்கிறாள்!
அமுதம் கசியும் அந்த‌
கேள்வி
இன்னும் தெறிக்கவே இல்லை
பெண்ணே
உன் புன்னகையை மட்டும்
பாஸ்வேர்டு ஆக வீசினாய்
காதல் கணினி இன்னும்
கதவு திறக்கவில்லையே !


=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக