வியாழன், 17 ஜனவரி, 2019

வர்ணப்புயல்

வர்ணப்புயல்
=============================================ருத்ரா

அது போதும்!
அந்த இனிய சாக்கலேட்
பொட்டலத்தை
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
அந்த வண்ணப்பேப்பர்
ஆயிரம் குமிழிகளாய்
கனவுகளாய் அந்த
நினைவின் இனிப்பை
சுற்றி வைத்திருக்கிறது.
அதை
திடீரென்று
திறந்து பார்த்து சுவைத்திட
வேண்டுமா என்ன?
நான் அவசரப்படவில்லை.
அந்த சாக்லேட் என் கையில்
இனிப்பின் அடர் மழையை
கொட்டக்காத்திருக்கிறது.
அதை திறக்காமல்
என் ஆவலை மட்டுமே
அங்கு திறந்து திறந்து
மூடிக்கொண்டிருக்கிறேன்.
ஆமாம் எப்படி நான்
ஒரு சிறுவன் ஆனேன்?
அவள் அன்றொரு நாள் வீசிய
அந்த இனிமை ததும்பும்
ஒரு பார்வை மட்டுமே
இப்படி ஒரு சாக்லேட் பொட்டலம் ஆகி
என்னை ஒரு பொட்டலம்
போட்டுவிட்டதே!
இந்த புழுக்கூட்டு மண்டலத்திலிருந்து
வர்ணப்புயலாய்
என் காதல் சிறகுகளை
எப்போது விரிப்பேன்?
தெரியவில்லை.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக