ஞாயிறு, 13 ஜனவரி, 2019

விஸ்வாஸம் (2)

விஸ்வாஸம் (2)
================================================ருத்ரா

மசாலாப்போஸ்டர்களும் டீசர்களும்
புழுதி கிளப்பி
புழுதியடங்கிய பின்
"புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கும்"
கிராமக்காட்சிகள்
கொஞ்சம் கொஞ்சமாக‌
கீழிறங்கி
"தல"யை
அழகிய முகமாய்
உணர்ச்சிக்கொந்தளிப்பில்
பாசப்பறவைகள் சிறகடிக்க‌
வைக்கிறது படம்.
விட்டால் அல்லது நினைத்திருந்தால்
பாசமலர் "சிவாஜி"ரேஞ்சுக்கு
சிவா அவர்கள் கொண்டு போயிருக்கலாம்.
ஆனால் அந்தக் காலத்து நெகடிவ் சென்டிமெண்டுகள்
இந்த மசாலாத்தனத்தையெல்லாம்
சுரண்டி அழித்துவிடும்.
ஆனால்
சிவாஜி மரணமடையும் போது
சாதாரணமாக இறந்தார்.
ஆனால் பாசமலரில் அந்த‌
"மரணக்காட்சியில்" தான்
இறந்து காட்டி
வாழ்ந்து காட்டினார்.
அதனால் அவர் காலமானது கூட‌
ஏதோ எமனே பீம்சிங்காய் வந்து
அந்த இறுதிக்காட்சியை
ஷூட்டிங் செய்து அவரோடு
கூட்டிக்கொண்டு போன மாதிரிதான் இருந்தது.
அஜித்தின் உருக்கமான நடிப்பு தான்
இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

மற்றுமொரு பவர்ஃபுல் ப்ளஸ்
நயன் தாரா.
கிராமமும் அந்த ட்ராக்டரும்
அஜித்தை
கம்பீரமாய் காட்டிய போதும்
கிராமத்துக்குடும்ப பாங்கை
தெள்ளிய இளநீர் போல் "தெறிக்க"விட்டு
குளிர்ச்சி மழை தூவியிருக்கிறார்
நயன் தாரா.

தன் பெண்ணுக்கு
விசில் அடிக்க கற்றுத்தரும்போது
அஜித் தன் மூச்சுக்காற்றில்
நடிப்பின் எல்லா பரிமாணங்களையும்
காட்டி விட்டார்.
மக்கள் முன்னே இறுகிய பாறையாய்
நிற்கும்
அவர் மனத்துள் சுரக்கும்
பனை நுங்கின் மெல்லிய பாசம்
மகளை பூவின் ஆடையாய்
போர்த்தி விடுகிறது.
நம் நாட்டில் விவசாயம் இப்போது
கந்தலாய்க்  கிடந்தபோதும்
அது எழுச்சி பெரும் கனவை
அந்த ஏர் தூக்கிய கனமான காட்சியில் 
அஜீத்திடம்
"அட்லஸின்" அசுரத்தனம் அனாயாசமாய்
வெளிப்பட்டது.
தேனி மக்களின்
வீரம் பொங்கும் மொழிக்குள்ளும்
அந்த மண்துளிகள் சிலிர்க்கும்
சிலம்பு பரல்களுக்குள்ளும்
புகுந்து புறப்பட்டு வருகிறார் அஜித்
ஒரு மாபெரும் வெற்றியுடன்!

===============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக