செவ்வாய், 22 ஜனவரி, 2019

அதிர்ச்(சி)குமார் எனும் அஜித்குமார்

அதிர்ச்(சி)குமார் எனும் அஜித்குமார்
===================================================ருத்ரா

சினிமாவின் நிழல்
உயர்த்தித்தரும்
நூலேணி கொண்டு
வானத்தில் ஏறி
ஒரு நட்சத்திரம் ஆகி
அதையே
அரசியலின் ராஜபாட்டை
ஆக்கிக்கொள்ளும் நிலையை
விரும்பாமல்
அந்த "சப்னோங்கி சௌதாகர்களுக்கு"
(கனவு வியாபாரிகள்)
அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கும்
அஜித்குமார் அவர்கள்
மிகவும் பாராட்டுக்கு உரியவர்.
கதாநாயகர்களின்
கச்சா பிலிம் மசாலாக்களைக்கூட‌
தாமரையிலையாய் நினைத்து
ஒட்டாமல்
ஆனால் நடிப்பின்
எழுவர்ணங்களை வாரியிறைக்கும்
நீர்த்துளியாகச்
சுடர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த தாமரையிலையில்
ஒரு நான்கு வர்ணத்தாமரைப்"புஷ்பத்தை"
பதியம் இட்டுவிட பார்த்தவர்கள்
ஏமாந்து தான் போனார்கள்.
எங்கள் மீது வேண்டாம் அய்யா
இந்த அரசியல் சாயம் என்று
கலைஞரிடமே இந்தக் கலைஞர்
வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
வாலி
வில்லன்
வரலாறு
என்று தன் படங்களின்
தரத்தின் முத்திரையை
உயர்த்திக்கொண்டே போயிருக்கிறார்.
அப்படியிருந்தும்
தன் ரசிகர்களிடையே அவர் வலம் வந்தது
"ஆசை" நாயகனாகத் தான்
கோட்டையை
ஆளவரும் நாயகனாக அல்ல.
அதனால் தான்
அவர் குரலான‌
"வாழு வாழவிடு"
நமக்கு இப்படி கேட்கிறது:
"ஆளு "ஆள"விடு"
நீ எப்படியோ ஆளு.
"ஆள விட்டுடுப்பா" என்னை!
என்பது போல கேட்கிறது.
ரசிகர் மன்றங்கள்
அரசியலின் சதுப்புக்காடுகளுக்குள்
புதைந்துவிட‌ வேண்டாம் என்று
தன் ரசிகர்மன்றங்களையே கலைத்தவர் இவர்.
"கலை என்றால்
கலையும் ஆகும் கலைத்தலும் ஆகும்"
என்று நகைச்சுவையாக பாடிய‌
கலைவாணர் என் எஸ் கே தான்
நம் நினைவுக்கு வருகிறார்.
நம் மதிப்பிற்குரிய தமிழிசை அவர்கள்
என்ன தான்
அவர் அறிக்கையை
ஆகா ஓகோ என்று பாராட்டினாலும்
"வடிவேலுவின்" "வட போச்சே"
என்ற உட்பொருள் தானே தொனிக்கிறது!
அஜித் அவர்களுக்கு
அரசியல் என்றால் அலர்ஜி
என்றொரு நோய் இருக்கலாம்.
ஆனால் சமுதாயத்தின் சாயம் ஒட்டாமல்
இருப்பது
அதுவும் தமிழ்நாட்டின்
தமிழ் என்றால் என்ன?
கிலோ என்ன விலை என்று
கேட்கும் அளவுக்கு அளவுக்கு
இருப்பாரோ என்ற‌
ஒரு அன்னிய உணர்வை
இங்கு பதியம் இடுவது
அவருக்கும் நல்லதல்ல!
அவர் கலைக்கும் நல்லதல்ல.
ஆனால்
தமிழை அவ்வளவு அழகாக ஒலிக்கும்
அவர் அப்படியெல்லாம்
இருக்க மாட்டார் என்று நம்புவோமாக.
இருப்பினும்
இவர் போல் நிறைய‌
தமிழ்ப்படங்கள் நடித்துக்குவித்தவர்
வெறும் "டப்பு"க்கு "டப்" செய்த‌
ஒலியையே நம்மிடை வேரூடவைத்தவர் தான்.
அவர் நம் பாசத்துக்குரிய
நடிகர் மோகன் அவர்கள்!
இவர் அப்படி இன்னொரு மோகனாக‌
போய்விடக்கூடாது என்று
ரசிகர்கள் அவர்களின் தோள்களில்
ஏற்றி கோட்டைக்கு உயர்த்திட‌
முந்துகிறார்கள்.
அப்போதும் அவர் அந்த
கோட்டைகளையெல்லாம்
ஒரு கோடு போட்டு
அப்பால் நகர்த்திவிட்டார் என‌
நினைக்கும் போது
அவர் பெருமையுடன்
உயர்ந்து நிற்கிறார்.
அவர் புகழ் வளர்க!

==================================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக