வெள்ளி, 4 ஜனவரி, 2019

சீதக்காதி (2)

சீதக்காதி (2)
============================================ருத்ரா

அந்த நடிப்பின் இமயம்
உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறார்
என்று ஒரு சிறந்த நடிகனை
பாராட்டுகிறோம்.
ஆனால்
இதோ ஒருவர்
உயிரையும் அதனோடு
அதற்குப்பின் நீண்டுவரும்
ஆவியையையும் சேர்த்து
நடித்துக்கொடுத்து  இருக்கிறார்
என்று சொல்லவைத்திருப்பவர்
விஜய சேதுபதி.
நாடகக்காரர் என்பதால்
அந்த "ஔரங்கசீப்" நாடகம்
எனும் கட்டளைக்கல்லில்
தன் நடிப்பை நன்கு உரசித்தான்
காட்டியிருக்கிறார்.
சினிமா எனும் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
சினிமாவையே கலாய்க்கும்
கலையில்
நம் முன்னோடிகளான‌
பாலச்சந்தர் கிருஷ்ணன் பஞ்சு
போன்றவர்கள்
நம்மை நிறைய சிந்திக்கவைத்திருக்கிறார்கள்.
ஆனால்
நாம் சிந்திக்கத்தான்
அந்த படைப்புகள்
இல்லை என்பதும்
அதுவும் கூட கல்லாகட்டுவதில்
ஒரு கலை என்பதும்
நாம் புரிந்து தான் வைத்திருக்கிறோம்.
சினிமாவே அல்லது
சினிமா படைப்பாளிகளே
தங்கள் சிகை திருத்திக்கொள்ளும்
அலங்காரத்துக்கு கண்ணாடியில்
தங்களை முகம் பார்த்துக்கொள்ளும்
ஒரு சுயவிமர்சனாமாக இதை
எடுத்துக்கொள்ளலாம்.
நகைச்சுவை மூலம்
அதை சாதிக்காட்டியவர் நாகேஷ்!
மேடையில் மக்கள் முன்னே
நடிப்பின் நரசிம்மாவதாரத்தை
நரம்பு நரம்பாக உரித்துக்காட்டவேண்டும்
என்ற முனைப்பும் தாகமும்
உள்ளவர் தான்
விஜயசேதுபதி என்பது
பளிச்சென்று தெரிகிறது.
அதனால் ஒரு ஆவி அல்லது பேய் வடிவில்
வந்து அந்த ஸ்டில்லில் உள்ள‌
வில் அம்பு கொண்டு
வில்லன்களை எல்லாம் அவர் எய்வது போல்
ஒரு பிரமையைக்காட்டியிருக்கிறார்.
செத்தும் கொடுத்த என்ற சொல்லை வைத்து
உலா வந்த சீதக்காதி எனும்
ஆதிமூலம் அய்யா அவர்களின்
அரிதாரங்கள் வெறும் பவுடர் அல்ல.
தன் ரத்தசிவப்பு அணுக்களையே
கதையில்
அணு அணுவாய் உயிர்பூசி நடித்திருக்கிறார்.
அவர் மீது
கண்ணுக்குத்தெரியாத‌
சினிமாவின் தேசிய‌ விருதுகள்
காய்த்து காய்த்து தொங்குவதாகத்தான்
தெரிகின்றது.
வாழ்த்துக்கள்!

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக