செவ்வாய், 29 ஜனவரி, 2019

அஜித்தின் முகமூடி

அஜித்தின் முகமூடி
=======================================ருத்ரா

அஜித்
நல்லவர் வல்லவர்
பால்முகத்தோடு
வெள்ளைச்சிரிப்பை மட்டுமே
ஏந்தியிருப்பவர்.
நடிப்பில் புயல் போல வீசி
தனக்கொரு முத்திரை வைத்திருப்பவர்.
திராவிடம் என்றாலே
அது ஏதோ திராவகம்.
அதன் நெடி நமக்கு வெடி
என்று
ஒதுங்க நினைப்பவர்களில்
அவரும் ஒருவர்.
கார் நாடு (மழை நாடு)
எனும் கர்நாடகா
திராவிடத்தின் உந்துவிசைகளின்
ஊற்று எனும் போது
அவருக்கு ஏன் இது அலர்ஜி ஆனது?
அவர் தனிப்பட்ட‌
சட்டைப்பாக்கெட்டில்
என்ன வேண்டுமானாலும்
வைத்திருப்பார்.
அதற்கு அருகே துடிக்கும்
இதயம்
ஏதாவது "மாட்லாடு" என்று
பாடிக்கொண்டிருக்கும்.
ஆனால் தமிழ் நாட்டு
மக்களின் கலை ஆர்வம்
எனும் வெள்ளத்தில் தான்
அவர் மிதந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும்
தமிழ் நாட்டு வெள்ளங்களோ புயல்களோ
அவரை ஒரு அங்குலம் கூட‌
அசைக்க வில்லையே.
அல்லது
விளம்பரங்கள் ஏதேனும் இன்றி
மானிட நேயத்தால் உந்தப்பட்டு
சில நற்பணிகளை செய்திருக்கலாம்.
அவர் ரசிக மன்றங்கள் கூட‌
அந்த நற்பணிகளை ஆற்றியிருக்கலாம்.
அவர் சொந்த முகம் என்ன முகம்
என்று நாம் தெரிந்து கொண்டதே இல்லை.
மேடைத்தோற்றங்கள்
அவர்க்கு பிடிக்கவில்லை என்றால்
அன்று கலைஞரிடம்
தனிப்பட்ட முறையில் பகிர்ந்திருக்கலாம்.
அந்த மேடையில்
அந்த திருஷ்டி பூசணிக்காயை
உடைத்து
அவர்
"உலகத்தோடு ஒட்ட ஒழுகும்"
இயல்பு கற்றவர் அல்ல என்று
காட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.
நமக்குத்ந்தெரிகிறது
அவர் மாட்டியிருப்பது
வெறும் வெள்ளை முகமூடி என்று.
பதவி நாற்காலியின்
ம்யூசிகல் சேர் விளையாட்டுக்கு
அவர் அழைக்கப்படுவதில்
பயன் ஒன்றம் இல்லை.
அவர் ஒரு பந்தயக்கார் குதிரை.
அரசியல் மியாவ் களின் பூனை அல்ல!

=============================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக