திங்கள், 21 ஜனவரி, 2019

திமில்

திமில்
====================================ருத்ரா

புறநானூற்றுக் காளைகளே
அந்தக் காளைகளின்
திமிலைச்சுற்றி
தழுவிக்கொண்டு
விடாமல் தொற்றிக்கொள்கிறீர்கள்.
திமில் மீது
கை பட்டதும்
அவை துள்ளியெழுந்து
அந்த வானத்தையே
குத்திக்கிழித்துவிடும்
போலிருக்கிறது.
உணர்வு எனும்
எரிமலைக்குழம்பில்
யாரும் கிச்சு கிச்சு
மூட்ட முடியாது.
அந்த கொம்பு சிலிர்ப்புகளில்
வில் புலி மீன் கொடிகளின்
படலங்கள்
அசைவது உங்களுக்குத்
தெரிகிறதா?
தமில் தமில் என்று
நுனி நாக்கில்
தமிழை ஒலிப்பவர்களே.
இந்த திமில்
தமில் அல்ல.
தமிழ்.
இதனைத்தொடும்போது
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வீரங்கொண்டு
அந்த சிகரத்தையே பிடித்து
விற்கொடி நிறுத்தினானே
அந்த எழுச்சியைத்தான்
இந்த திமில் தருகிறது!
தமிழ்க்காளையே
மீண்டும் உணர்வு கொள்.
தமிழ் தமில் அல்ல‌
திமில்.
உன் அடையாளம் உணர்த்தும்
வீரத்துடிப்பு அது!

====================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக