திங்கள், 7 ஜனவரி, 2019

அட்சுதூக்கு..அட்சுதூக்கு..அட்ச்ச்சுதூக்கு

அட்சுதூக்கு..அட்சுதூக்கு..அட்ச்ச்சுதூக்கு
==============================================================ருத்ரா

தலங்க்ற காவியத்துக்கு
இப்டி அடிச்சு தூக்கி
தொங்க விடுறத விட்டா
வேற எதுவும் எழுத
ஒண்ணுமே இல்லையா?
தலையங்கமே இல்லாத கட்டுரையா
"தல"
அவர் ஒரு நடிப்புச்சுரங்கம்
என்பதில் ஐயமில்லை.
ஆய கலைகள் அறுபத்து நான்கில்
கணிசமாய் நிறைய‌
கலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
வெறும் மசாலா கதாநாயகராய்
பல்லைக் கடித்து மீசை முறுக்கி
உறுமிக்காட்டும்
செல்லுலோஸ் சிங்கமா அவர்?
மக்கள் எவ்வழி
மன்னன் அவ்வழி
என்பது போல்
ரசிகர் எவ்வழி
நடிகர் அவ்வழி
என்பதாய்
நம் கோடம்பாக்கத்து
அட்டை ராஜ்யங்கள் ஆளப்படுகின்றன.
சத்யஜித்ரே படங்கள்
ஒவ்வொன்றும்
திரைப்படக்கல்வியின்
ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள்
எனலாம்.
அஜித் அக்கலையின்
ஒரு நடிப்புக்கருவூலம்.
இப்படி கட் அவுட் கலாச்சாரத்துள்
அடக்கப்பட்டு
கொச்சைப்படுத்தப்படுவதால்
என்ன பயன்?
"சமஸ்காரா" தொடங்கி
எத்தனை கன்னடத் திரைப்படங்கள்
உலக தர விரிசையில்
வலம் வந்தன?
அஜித் ஒரு "ஆசை நாயகன்"
மட்டும் அல்ல.
திரைப்படம்
ஒரு இலக்கியம் ஆகும்போது
நடிகர்களின்
நரம்பு "தெறி"ப்புகளில் எல்லாம்
அந்த உயிரோட்டமான கதை மட்டுமே
துடிக்கும் சிலிர்க்கும்.
அஜித் அவர்களிடம்
அத்தகையதோர்
நடிப்புக்காவியம் உண்டு.
அவரை இப்படி
"தல""தல" என்ற
கூச்சல் காடுகளில்
புதைய விடுவது நல்லது அல்ல!

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக