வெள்ளி, 18 ஜனவரி, 2019

காலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க?

காலண்டர் தாள்கள் இன்னும் எத்தனை கிழிக்க?
===================================================================
ருத்ரா




நீ சிரிக்க நினைக்கிறாய்.
அதுவே வயிற்றைப்பிசைகிறது.
சிரித்து விட்டால்...

உன் பார்வைக்கா பகீரதன் தவம்?
தண்ணீர் லாரிக்கு
குடங்களோடு காத்திருக்கிறேன்.

அடுத்த பிப்ரவரி பதினாலு.
காலண்டர் தாள் இன்னும் எத்தனை கிழிக்க?
தாத்தா சொல்லியிருக்கிறார்..அது
இன்னும் துவாபரா த்ரேதா என்று
என்னென்னவோ யுகமாம்!
யுகங்கள் முன்னும் நகர்ந்தாலும்
தாத்தாவின் பிப்ரவரி பதினாலு
அப்படியே நிற்கிறது.

சன்னல் கம்பிகள் தெரியவில்லை.
அவள் தோன்றும் வரை..அது
கரும்புக்காடு.

எதிர்வீட்டு தாத்தா சென்று கொண்டிருந்தார்
பளபளப்பு கவருடன் போஸ்ட் ஆஃபீசுக்கு.
"என்ன தாத்தா?
பேத்திக்காக போஸ்ட்மேன் வேலையா?"
"எனக்குத்தான்..நேரமே கிடைக்கலே.."
அவர் கையில் பிரிட்டிஷ் காலத்து
பழுப்பேறிய கவர் தான்
பளபளப்பாய் தெரிந்தது.
அவள் எழுதியதாம்
பிரித்துப் படிக்க
வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.
திருப்பி அனுப்பப்போகிறார்.

"பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை..."
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
நீண்டும் நீண்டும்
மின்னலடிக்கும்  இது..
மீண்டும் காத்திருப்பாராம்
அதே பழுப்பேறிய கவருக்கு!

==================================================
17.02.2015






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக